- Description
- Comment
- Post a comment
வைத்தியர் ஐயா, ஓ வைத்தியர் ஐயா! தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.
ஆ என்ன சொல்கிறாய்!.
ஆமாம் ஐயா உண்மையைத் தான் சொல்கிறேன்.
சரியாக கேட்டு வந்தாயா?.
சரியாக தான் கேட்டு வந்தேன்.
சந்தேகம் எதுவும் இல்லையே, நன்றாக பார்த்தார்கலாமா, ஆண் குழந்தை தானே?.
ஐயா! எல்லாம் சரி பார்த்து தான் சொல்கிறோம், ஆண் குழந்தை தான் உங்களுக்கு பிறந்து இருக்கிறது.
அப்பா இந்தா இதை வைத்துக் கொள், நல்ல செய்தியை தந்தாயே என்று கையில் ஏதோ காப்பை போன்று அணிந்தவர் அதை கழட்டி கொடுத்தார்.
என்ன ஐயா பரிசு எல்லாம் தருகிறீர்கள்!?.
பின் என்னவாம் 15 பெண் குழந்தைக்கு பிறகு இந்த ஒரே ஆண் பிள்ளை அல்லவா, வைத்திய குலத்தையே உயர்த்த போகிறவன். எங்களை எல்லாம் தேசாங்க மன்னன் இடத்தில் இருந்து காப்பாற்ற போகிறவன். இனி வைத்தியர்கள் தேசாங்க மன்னனுக்கு அடிமைகள் இல்லை நாங்கள் எல்லோரும் விடுபட்டுவிடுவோம். ஐயோ எனக்கு குழந்தையை பார்க்க வேண்டும் போல் இருக்கிறதே ஆனால் இங்கு இருந்து ஊருக்கும் வர முடியாதே. இந்த தேசாங்கு
மன்னன் விடுவித்தால் தான் நான் வர முடியும்.